Posts

Showing posts from April, 2018

Part 1...Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

நான் ... அருள்நீதிதேவன். ஆண் செவிலியர். இங்கிலாந்து. ஒரு நர்ஸா... இங்க எப்புடி வாழ்க்கை போகுதுன்னு பகிர்த்துகிறதுக்கு ஆசை படுறேன். என்ன ., என்ன.. இழப்புகள், என்ன சாதிச்சோம்னு வெளியில சொன்னா.. மனசுக்கு ஒரு இதம். டிபிக்கல் நர்சிங் குடும்பம். என்னவெல்லாமோ ஆகணும்னு கனவுகண்டாங்க பெத்தவுங்க. எனக்குன்னு எந்த கனவும் இருந்தது இல்ல. ஆனா நர்சா மட்டும் ஆகக்கூடாதுன்னு நெனச்சேன். கம்ப்யூட்டர்ல எம்பில் வர பண்ணினாலும் ., கடைசியில வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தது “செவிலியம்” தான். நர்சிங்சேருர வரைக்கும் நான் வாழ்க்கைல கஷ்டம்னு ஒரு பகுதியை பார்த்தது இல்ல... அதுக்கு அப்புறம் நடந்ததெல்லாம் தினமும் ஒரு படிப்பினை. நான் .... எனக்குன்னு பல அவதாரம் இருக்கோ இல்லையோ.... அத சொல்லி பீத்திக்க விரும்பல. ஆனா “ நான் செவிலியன்” னு சொல்லிக்கிறதுல .., ஏகமனதாக கர்வப்படுகிறேன்... இங்கிலாந்துல வேல பார்குறதுனால .., இவன் புத்திசாலையோ.., படிப்பாளியோ ன்னு நினைக்காதீங்க. நான் ஆவரேஜ் மாணவன் தான். அதுக்காக திறமை இல்லைன்னு இல்ல.. அத உபயோகிக்கத் தெரியாத சோம்பேறி. அப்புறம் எப்புடின்னு கேக்குறீங்களா?.. அஜித் வசனத்துக்கு ஆப்போ...

திரு.அருள் நீதி தேவன்..அவர்களை பற்றிய குறிப்பு..

Image
திரு.அருள் நீதி தேவன் முதுகுளத்தூரில் பிறந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, செவிலியர் பள்ளியில் 2000ல் செவிலியப் படிப்பை முடித்து இலண்டனில் செவிலியராக பணிபுரிகிறார் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக..... இவரது தாயார் செவிலியக்கண்காணிப்பாளராக இருந்து மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் பணி ஒய்வு பெற்றவர்...... இவரது தகப்பனார் ஒரு சமூக சேவகர்... இவரது மனைவி செவிலியர்   திருமதி.செல்வி....... Overseas Nursing குறித்தும் தமக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களைப் பற்றியும் சில தினங்களில் நம்மிடம் இலண்டனில் இருந்து நம்மிடம் விரைவில் பகிரப்போகிறார் திரு.அருள் நீதி தேவன்....💐💐💐💐💐

part 1..சங்கத் தனிநிலை விதியும்(BYLAW), எனது கண்ணோட்டத்தில் அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்..ச.பால்பாண்டியன்..

*செவிலிய மறுமலர்ச்சி தொடர்(30/04/17) :* *சங்கத் தனிநிலை விதியும்(BYLAW), எனது கண்ணோட்டத்தில் அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்..* *அத்தியாயம் 2 :* சென்ற அத்தியாயத்தில் சங்கத்தின் தோற்றம் குறித்தும், சங்க முன் வரைவுக் குழு பற்றியும், ஆரம்பகால உறுப்பினர்கள் பற்றியும் பார்த்தோம்..!! இந்த அத்தியாயத்தில் நமது சங்கத்தின் தனிநிலை விதி(BYLAW) அமைப்பைப் பற்றி பார்க்கப் போகிறோம்.. *தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத் தனிநிலை விதி(BYLAW) அமைப்பு :* *1. பெயர் :* இச்சங்கத்தின் பெயர் *தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்* என்று தமிழிலும், *TAMILNADU GOVT. NURSES ASSOCIATION* என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும். *2. இலச்சினை(Emblem) :* இந்த சங்கத்திற்கு ஒரு வட்டத்தின் உள்ளாக ஒரு விளக்கிலிருந்து கதிர்கள் வெளிவருவது போன்று இலச்சினை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வட்டத்தின் உள்ளாக *TGNA* என்றும், *பிணியாளர் சேவையே பிறப்பிலான் சேவை* என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. *3.வரையறுப்பு :* *சங்கம்* என்றால் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் என்று பொருள். *உறுப்பினர்* என்றால் சங்கத்திற்கு சந்தா செலுத்தும் உ...

இந்தியாவில் தொழிற்சங்கம் தோன்றிய வரலாறு...திரு.மணிகண்டன்

* "செவிலியச் சிறகுகளின் * * செவிலிய மறுமலர்ச்சி பாகம் -2" *   * (16/04/2018) * ~~~~~~~~~~~~~~~~~ * படைப்பாளி *    ~~~~~~~~~~ * 1.திரு.மணிகண்டன் *               * (செவிலியர்) *    *(இந்தியாவில் தொழிற்சங்கம் தோன்றிய வரலாறு...பின் செவிலிய சங்க தோன்றல்    வரலாறு ...) *இன்றைய பதிவில் பணி காரணமாக திரு.மணிகண்டன் மாஸ்டர் அவர்களுடைய எழுத்துருவம் இல்லாவிட்டாலும் ஆடியோ உரை கிடைத்துள்ளது...

சங்கத் தனிநிலை விதியும்....செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்.....திரு.S.பால்பாண்டி

* "செவிலியச் சிறகுகளின் * * செவிலிய மறுமலர்ச்சி பாகம் -2" *   * (16/04/2018) * ~~~~~~~~~~~~~~~~~ ✍✍✍✍✍✍✍✍ * படைப்பாளி *   * 1.திரு.S.பால்பாண்டி *                               * (செவிலியர்) *      * (சங்கத் தனிநிலை விதியும்             (BYLAW), தனது  கண்ணோட்டத்தில் அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்...என்ற*செவிலிய மறுமலர்ச்சி கட்டுரை* செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.. 🙏🙏 *செவிலிய மறுமலர்ச்சி*  *என்ற பெயரில் செவிலிய துறையின் முன்னேற்றத்திற்கு ஒரு அடி முன்னெடுத்து வைத்திருக்கும் ஆண் செவிலியர், எனது மூத்த சகோதரர் திரு.ராஜாராம் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!* ஒரு துறையில் மறுமலர்ச்சி என்பது அத்துறையைச் சேர்ந்தவர்கள், அவர்களின் துறை சம்பந்தமான அனைத்து தகவல்களையும், அரசாணைகளையும், பணி...

செவிலியமும் சில நெகிழ்ச்சி தருணமும்....திரு.ராஜாராம்

Image
*செவிலியமும் சில நெகிழ்ச்சி தருணமும்.........* ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~       *நான் செவிலிய பட்டயப்படிப்பை 2003 ஏப்ரலில் முடித்து சென்னை அப்போலோவில் Unique Home Health Care ல் குடும்ப சூழல் காரணமாக ஒரு வருடம் பணியாற்றினேன்(12 மணி நேரவேலை)*            *பின்பு மதுரை அப்போலோவில் 8 மணிநேர செவிலியராக பணியாற்றியபோது Home duty ஐ யே  முழுவதும் பார்த்துவிட்டு மருத்துவமனையில் பணி அதுவும் Corporate company Hospital என்றதும் முதலில் தயக்கமாகத்தான் இருந்தது.பின் என்னை முழுவதுமாக ஈடுபட ஆரம்பித்துக் கொண்டேன்*. *அப்போதுதான் 2004 டிசம்பர் 26 யாரும் மறக்க முடியா சுனாமி புரட்டிப்போட்ட நாள்*அதற்காக எங்கள்* *மருத்துவமனையில் இருந்து 2 குழுவாக பிரிந்து*  *முதலுதவிக்காக கன்னியாகுமரி,நாகப்பட்டிணம்* *பகுதிகளுக்கு சென்றோம்*.*அந்த* *தருணம்* *வாழ்வில் மறக்க முடியாத* *தருணமாக* *இருந்தது*?*பணக்காரர்கள்* *பலர்* *நாங்கள் கொடுக்கும்* *ரொட்டிப்பொட்டலங்களை வாங்க* *மனமில்லாமலும்* *அதே நேரம் *பசித்துயராலும்* *வாங்கிச்* *சென்றனர்.செவிலியராய் பல உயிர்க...

திருச்செவிலியா்....எழுதியவர்....திரு.K.இளங்கோவன்

*" திருச்செவிலியா்  "* ------------------------------------ _*அ*ன்பென்ற வாா்த்தைக்கு இலக்கணம் நீயே!_ _*ஆ*சுவாச வாா்த்தைகளால்_ _படைக்கப்பட்டாயே!_ _*இ*ராப்பகல் தினப்பணியால் திணறிவந்தாலும்.,_ _*ஈ*டில்லா_ _திருச்செவிலியம்_ _தினம்_ _செய்வாயே!_ _*உ*யிா்காக்கும் மருத்துவா்களின் துணைநிற்பாயே.,_ _*ஊ*சலாடும் பிணியா்களின் துயா்துடைப்பாயே..!_ _*எ*ளியோா்க்கும் வறியோா்க்கும் வழிகாட்டியும் நீ..!_ _*ஏ*ழைகளின்_ _உயிா்காக்க_ _துணைநிற்பவா் நீ !_ _*ஐ*யத்துடன்_ _வருவேரை_ _அரவணைப்பவா் நீ !_ _*ஒ*ற்றைமுகம்கொண்ட பன்முகதேவதை நீ !_ _*ஓ*ராயிரம் வாா்த்தைசொல்லிகுணமளிப்பவா் நீ !_ _*ஔ*டதப்பணிதனயே_ _அலங்காிப்பவா் நீ..!_ _பெண்ணடிமை காலத்திலே முன்னடி வைத்தவள் நீ..!_ _வெண்ணிற சீருடையை சீராய் பெற்றவா் நீ.,_ _சமாதான நிறத்துக்கே எடுத்துக்காட்டும் நீ!_ _மருந்துலக  மணிமகுடத்தின் வெண்முத்தும் நீ !_ _துயா்படும் பிணியாளின்              துயா்துடைப்பான் நீ !_   _இன்னல் போக்கும்  இறைபணியின் இன்முகத் *"தாய்"*நீ !_ _தாயாக தங்கையாக சகோதர...

செவிலியம் பற்றி திரு.பா.மணிகண்டன் அவர்கள் உரை....

அன்பு செவிலிய சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்..... அன்பு நண்பர் *திரு.ராஜாராமின்*இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்..... செவிலியம் பற்றி திரு.பா.மணிகண்டன் அவர்கள் உரை.... *தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என உணராத இயல்பினளாம் எங்கள் தாய்* என்கிறார் பாரதி நம் தாய்மொழியை.... அதுபோல் நம் செவிலியமும் தொன்மையானது.... நைட்டிங்கேல் அம்மையார் நர்சிங் கண்டுபிடிப்பதற்கு முன்பே *செவிலிதாய்* என பண்டைய இலக்கியங்களில் காணப்படுகிறது.... செவிலி அவர் பண்புகள் என வாழ்வியல் நெறியாக காணப்படுகிறது.... பெண்களை அவர்கள் நால்வகை படுத்தினர்.... *தலைவி* *தோழி* *நற்றாய்* *செவிலி* தமிழ் இலக்கணம் வரையறுத்த *தொல்காப்பியம்* களவியல், கற்பியல் என இரு இயல்களில் செவிலியின் சிறப்புகளை எடுத்து சொல்கிறது..... *ஆய்பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாயெனெபடுவாள் செவிலியாகும்* நல்ல பெரிய சிறப்புடைய அறிதற்குரிய மறைபொருள் யாவற்றையும் கூறும் கட்டுப்பாடு உடையவளாதலின் தாயெனப்படுவாள் செவிலியாகும்..... *கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள நல்லவை உரைத்தலும் அல்லவை கட...
செவிலியம் தொடர்பான இதர சில வலைதள முகவரிகள்.... tna nurses site tnnurse site tnfwebsite site

ஆரம்பம்

இன்று முதல் காஞ்சிபுரம் மாவட்ட செவிலியர்கள் செவிலியம் தொடர்பான தகவல்களை இத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்......