Posts

Showing posts from May, 2018

Part 7... Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

கடைசி ஒரு வாரம் நான் ரொம்ப பிசி. இதோ ஜெப்.., நர்ஸஸ் ஹோமிற்கு வந்து ஒரு வாரத்தில் ஜெப்பின் மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள். இளம் ஸ்டாப்கள் .. குறிப்பாக பெண்கள், நிறைய சிரமம் அடைந்தார்கள். அவர்களிடம் ஜெப் ஒத்துப்போகவில்லை. ஆயிரம் இருந்தாலும் வயது குறைந்த புதிய நபர்கள் , அவர்கள் முன்னிலையில். ..தன்னை ஆடைகலைய கூறும்போது மனரீதியாக சஞ்சலம் அடைந்தார். ஆகவே பெரும்பாலும் ஆண் ஊழியர்களே அவரை கவனித்தோம். நாம் கேட்பதற்கு சம்பந்தமே இல்லாத பதில்களை கூற ஆரம்பித்தார். Incoherent speech due to poor cognition. பெரும்பாலும் அவருடன் .. அவரும் க்வென்னும் வாழ்ந்த இளமை பருவ நிகழ்வுகளை பற்றி கேட்டால் ஆர்வத்துடன் பதிலளிப்பார். அந்த யுத்தி பல நேரங்களில் உதவியது. 90 வயதிலும்.., அவரது 16 -19 வயது காதல் பயண நினைவுகள் எள்ளளவும் பிசிராமல் அப்படியே இருந்தது எல்லோருக்கும் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். முதன்முதலில் அவரிடம் க்வென் அன்பை சொன்னது., இவர் க்வென்னிடம் கல்யாணம் பண்ண கேட்டது... அப்ப்போது அவர்கள் இருந்த இடம்., அணிந்து இருந்த ஆடை.. எல்லாம் சொல்லுவார். டோணி (அத்தோணி - அவர்களது மகன்) பிறந்த தினம்., வளர்ப்பு ப...

part 3....சங்கத் தனிநிலை விதியும்....செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்.....திரு.S.பால்பாண்டி

Image
*செவிலிய மறுமலர்ச்சி தொடர் : *சங்கத் தனிநிலை விதியும்(BYLAW), எனது கண்ணோட்டத்தில் அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்..* *அத்தியாயம் 4 :* சென்ற அத்தியாயத்தில் சங்கத்தின் தனிநிலை விதி அமைப்பில் மாநில, மாவட்ட மற்றும் நகர கிளைச் சங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்புகளைப் பற்றி பார்த்தோம்.. இன்று சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை குறித்தும், நிர்வாகம் குறித்தும் பார்க்கவிருக்கிறோம்.. *7)* *சங்கத்தின் ஆண்டு :* நாட்காட்டி ஆண்டுதான் (CALENDAR YEAR) நம் சங்கத்தின் ஆண்டுமாகும். சங்க நிர்வாகிகள் ஒவ்வொரு சங்க ஆண்டின் இறுதியிலும், சங்கத்தின் வரவு செலவை  தணிக்கை செய்து, அதன் விவரத்தை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். *8)* *உறுப்பினர் சேர்க்கை :* *>* தமிழக அரசின் கீழ் பணியாற்றும், முறையான பயிற்சி பெற்ற அரசு செவிலியர்கள் (BOTH GAZETTED & NON GAZETTED) அனைவரும் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைய தகுதியுடையவர்களாவர். சங்கத்தில் உறுப்பினராக இணைவதற்கு அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள உறுப்பினர் படிவத்தை (இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது) பூர்த்தி செய்து, அதனுடன் நிர்ணயிக்கப்பட்டுள...

Part 6... Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

டிமெண்ஸியாவுடன் வாழ்க்கை என் 14 வருட டிமெண்ஸியா நர்ஸ் வாழ்க்கையில்., மறக்க முடியாத ...., தன்நிலை மறந்த .., சில நபர்களின் .., வாழ்ந்து மறைந்த வாழ்க்கையை தொகுத்து பகிரலாம் என்று நினைக்கின்றேன். பகிரலாமா?!...... டிமெண்ஸியாவுடன் வாழ்க்கை. (Living with dementia) சராசரியா எல்லோருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். அரசாங்க வேலை. , நல்ல இடத்துல கல்யாணம். ., அறிவான குழந்தைகள்.., வீடு., அதுக்கு முன்னாடி போர்டிக்கோ வுல வண்டி., குழந்தைங்க கல்யாணம்., பேரக்குழந்தைங்க. ரிட்டையர்டு ஆயி பென்சன். அடுத்து நிம்மதியான வாழ்க்கை. இது தான் எல்லாரும் நினைக்கிறது. அதில் எல்லா பகுதியவும் திட்டம் போட்டு வெற்றி பெற்றாலும்... ரிட்டயர்ட் ஆன பிறகு வரும் வாழ்க்கையை .... “இனிமே என்ன இருக்கு” என்ன எண்ண ஓட்டத்துல சரியா திட்டம் போடாம., அல்லல் படுவது .., அந்த நிலைக்கு வரும் போது தான் உணரமுடியும். அப்போ வர்ற எண்ணங்களை பகிர்ந்து கொள்ளக்கூட யாரும் இருக்க மாட்டாங்க. இப்பலாம்., அடுத்தவங்க சொல்லுறத கவனிச்சு., கிரகிச்சு... பதில் சொல்லக்கூட பொறுமை இருக்காது. இதில் வயதானவர்கள் பேசுனாலே “வழவழன்னு பேசாதீர்கள். என்ன மேட்டர்ன...

செவிலியர் உறுதிமொழி

*நன்றி*:-  *Tnnurse.org* ~~~~~~~~~~~~~~~~ *வரக்கூடிய நமது செவிலியர்தினத்தில் நாம் அனைவரும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழி எடுக்கப்போவது (வழக்கம்போல் ஆங்கிலத்தில்)உறுதி....அதனை நமது தாய் மொழித்தமிழில் எடுத்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்*....) *செவிலியர் உறுதிமொழி* 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 *.“நான்* *இந்த* *அவையில்* *இறைவன்* *முன்னிலையில்* *எனது வாழ்க்கையை தூய்மையாகவும்* *எனது தொழிலை அர்ப்பணிப்புடனும்* *நடத்தி செயல்படுவேன் என* *உறுதி எடுக்கிறேன்*      *எனக்கோ எனது* *செவிலிய பெயருக்கோ* *களங்கம் விளைவிக்கும்* *அனைத்து செயல்களில் இருந்தும்* *நான் விலகி* *இருப்பேன்*     *பிணியாலர்களுக்கு* *எந்தவிதமான* *கெடுதலையும்* *விளைவிக்க கூடிய* *மருந்தினை* *கொடுக்கவோ* *அல்லது நான் எடுக்கவோ மாட்டேன்* *எனது சக்திக்கு உட்பட்டு* *எனது செவிலிய* *பணியின் தரத்தை* *நிலைக்க செய்யவும்* *அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும்* *நான் பாடுபடுவேன்* *நான் பணியில்* *இருக்கும் பொழுது* *எனக்கு தெரிய வருகிற* *பிணியாலர்களின்* *தனிப்பட்ட மற்றும் குடும்பம...

INTERNATIONAL NURSES DAY THEME...

*INTERNATIONAL NURSES DAY THEME* ~~~~~~~~~~~~~~~~~ *Every year theme of the International Nurses Day celebration from 1988 to 2018 is mentioned below*: The theme of 1988 was “Safe Motherhood”. The theme of 1989 was “School Health”. The theme of 1990 was “Nurses and Environment”. The theme of 1991 was “Mental Health – Nurses in Action”. The theme of 1992 was “Healthy Aging”. The theme of 1993 was “Quality, costs and Nursing”. The theme of 1994 was “Healthy Families for Healthy Nation”. The theme of 1995 was “Women’s Health: Nurses Pave the Way”. The theme of 1996 was “Better Health through Nursing Research”. The theme of 1997 was “Healthy Young People = A Brighter Future”. The theme of 1998 was “Partnership for Community Health”. The theme of 1999 was “Celebrating Nursing’s past, claiming the future”. The theme of 2000 was “Nurses – Always there for you”. The theme of 2001 was “Nurses, Always There for You: United against Violence”. The theme of 2002 was “Nurses Alw...

part 2..சங்கத் தனிநிலை விதியும்....செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்.....திரு.S.பால்பாண்டி

*செவிலிய மறுமலர்ச்சி தொடர் :* *சங்கத் தனிநிலை விதியும்(BYLAW), எனது கண்ணோட்டத்தில் அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்..* *அத்தியாயம் 3 :* சென்ற அத்தியாயத்தில் சங்கத்தின் *1) பெயர், 2) இலச்சினை, 3) வரையறுப்பு, 4) அமைவிடம், 5) சங்கத்தின் நோக்கங்கள்* ஆகியன குறித்து பார்த்தோம். இன்றைய பதிவில் அதன் தொடர்ச்சியாக சங்கத் தனிநிலை விதியில் மாநில, மாவட்ட மற்றும் நகர கிளைச் சங்கத்தின் நிர்வாக கட்டமைப்புகளை பற்றி தெரிந்து கொள்ளவிருக்கிறோம். *6) தனிநிலை விதி அமைப்பு:* *மாநில அளவிலான நிர்வாகக் கட்டமைப்பு :* மாநில செயற்குழுவானது கீழ்க்காணும் நபர்களை உள்ளடக்கியுள்ளது.. *அ) தலைவர்.* *ஆ) துணைத் தலைவர்கள்- 13* (ஒருவர் சென்னை நகருக்கும், ஏனைய 12 பேர் மற்ற மாவட்ட கிளைச் சங்கங்களுக்கும் பொறுப்பாளர்களாவர்) *(1960 ல் நம் சங்கத் தனிநிலை விதி உருவாக்கப்பட்ட பொழுது, சென்னையுடன் சேர்த்து மொத்தமே 13 மாவட்டங்கள்தான். ஆனால் இன்று 32 மாவட்டங்கள். அதன்படி பார்த்தால் நமக்கு 32 மாநில துணைத் தலைவர்கள் தேவை. முன்னோர்கள் நம் சங்கத் தனிநிலை விதியிலும் அதற்கான வழிவகைகள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். கட...

உலக செவிலியர் நாள்..புளோரன்ஸ் நைட்டிங்கேல் வரலாறு......

Image
*உலக செவிலியர் நாள்* ~~~~~~~~~~~~~~~~~  (*International Nurses Day*) *உலக நாடுகளனைத்திலும் மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது*.  செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலக செவிலியர் அமைப்பு (International Council of Nurses) இந்நாளை 1965அம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. 1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரசு சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (Dorothy Sutherland) என்பவர் இந்நாளை செவிலியர் நாளாக அறிவிக்க அன்றைய அதிபர் ஐசன்ஹோவருக்கு விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. ஜனவரி 1974இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது. ஆண்டுதோறும் மே 12ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயபூவமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அது அங்கு சமூகமளிக்கும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும்...

இந்தியாவில் செவிலியம் - வரலாற்றுப் பார்வை....

*இந்தியாவில் செவிலியம்* ~~~~~~~~~~~~~~~ *ஓர் வரலாற்றுப் பார்வை* ~~~~~~~~~~~~~~~~ *இந்தியாவில் செவிலியம் என்பது, இந்திய நாட்டில் நோயாளிகளைக் கவனித்துப் பேணுவதற்கான துறையைக் குறிக்கும். பழங்கால இந்திய ஆவணங்கள் செவிலியப் பணியின் கொள்கை முறைகளைப் பற்றி விளக்குகின்றன. அவை தெளிவாகவும், அறிவியல் நுட்பத்துடனும், அடிப்படை அறிவுடனும், இக்கால நவீன நூல்களுக்கு இணையாக விளங்குகின்றன. முதலில் இளைஞர்களே செவிலியப் பணியில் சேர்ந்தனர், பின்னர் மகப்பேற்றுத் துறையில் பெண்கள் சேர்க்கப்பட்டனர்*. *இந்திய நாட்டில் நிலவி வந்த ஜாதி முறைகள், கல்வி அறிவின்மை, பெண்களின் பின் தங்கிய நிலைமை, சம உரிமை அற்ற அரசியல் ஆகிய காரணங்களால் செவிலியத்துறை மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருந்தது*. *1664 இல் கிழக்கிந்திய கம்பேனிதனது வீரர்களுக்காக சென்னையில்உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில்ஒரு வீட்டில் முதல் மருத்துவ மனையை ஆரம்பித்தது. இந்த மருத்துவமனையில் பணிபுரிய இலண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் இருந்தது செவிலிய சகோதரிகள் வந்தனர்*. *1797* *இல் சென்னையில் உள்ள ஏழைகளுக்காக* *மருத்துவர் ஜான் அண்டர்வுட் என்பவரின் ...

மணிமொழியனின் செவிலிய வார மொழி....

*♻மணிமொழியனின்♻*  *❇செவிலிய வார மொழி💉✍* 👩🏻‍⚕மருத்துவத்தின் விவிலியம்📖 *💪எங்கள் செவிலியம்💉* 🚑ஆம்னிய திரவம் தோய்ந்த செங்குருதி🌡 👶🏻பிறந்த குழவி👶🏻 *🤰🏻தாய்க்கு முன்* பச்சிளம் குழந்தையை *அணைப்பதும்🤱🏻* ஆர்ப்பரிப்பதும்💃🏻 *💪எங்கள் செவிலியம்💉* 😨எத்தனை கடுமம்😠 🤬எத்தனை வன்மம்😡 🤫அத்தனையும் தாங்கி💪 🕊வெண்புறாவாய் *பறந்து🕊* 🤒சிகிச்சையில் *சிறந்து💊* 😔நோய்க்கவலை *மறந்து😊* *🛌🏻பிணியாளரை🛌🏻* *🕺🏻நலம் பணியாளராய்* மாற்றும்🕺🏻 *💪எங்கள் செவிலியம்💉* 🤕தொற்றா நோய்களும்😤 🤮தொற்றும் நோய்களும்🧐 கொண்ட நோயாளியை🛌🏻 👨‍👩‍👧‍👦குடும்பத்தினரே தொட மறுத்தாலும்😏 🙅🏻‍♂மறுக்காமல் 🙂 🤦🏻‍♂வெறுக்காமல்😊 😜அருவருக்காமல்😝 🤝தொட்டுத்தொட்டு சிகிச்சை தரும்🤒 சகிப்புத் தன்மை😊 *💪எங்கள் செவிலியம்💉* 🌌இரவுப்பணியில்🏥 😁சில ஆண்மையின் *தாக்கம்😱* 🤬வன்மையின் *நோக்கம்🗣* 🙍🏻‍♀தாயின் பிரிவில் தன் குழந்தையின் *ஏக்கம்😢* 🤲அத்தனையும் இருந்தாலும் 🚑 மருத்துவ சேவையே *நோக்கமாய்💉🗡💊* *💪எங்கள் செவிலியம்💉* 👨...

Part 5... Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

சம்பளம். வரி. நேஷனல் இன்ஸயூரன்ஸ் இங்க, சம்பளம்... மணிக்கணக்கில் தான் அடிப்படை அளவு நிர்ணயிக்கப்படும். சராசரியாக.,வாரத்திற்கு 37.5 மணி நேரம் என்பது  முழுநேர வேலை நேரம். 18 -24 மணி நேரம் -  பகுதி நேர வேலை. அதற்கும் கீழ் என்றால் தற்காலிக பகுதி நேர வேலை. (Bank shift). விடுப்புகள்.  நமது நிர்ணயிக்கப்பட்ட வார வேலை நேரத்தை அடிப்படையாகக் கொண்டு வருடத்திற்கு விடுப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த வேலை என்றால்., 7 1/2 வாரங்கள் (அரசாங்க விடுமுறை உட்பட) .., தனியார் என்றால்., குறைந்தது 5.6 வாரங்கள். பெரும்பாலும் 4 வாரங்களுக்கு முன் விடுப்பு பதிவிட்டுக்கொள்ளலாம். (இடத்திற்கு ஏற்ப மாறுபடும். அரசு சார்ந்த வேலைக்கு sick leave எடுத்தால்., முதல் 3 மாதங்களுக்கு முழு சம்பளம் கிடைக்கும். அடுத்த 3-6 மாதங்களுக்கு 1/2 சம்பளம். (இடத்திற்கு ஏற்ப மாறுபடும்). 9 மாதத்திற்கு மேல் ., company based occupational therapist (mostly a doctor) நம்ம செக். பண்ணிட்டு ., வேலைக்கு திரும்பலாமா, இல்லையா என்று முடிவு செய்வார்கள்.  பிரசவகால விடுமுறையாக 3rd trimester ல இருந்து குழந்தை பிறந்த 9 மாதங்கள் வ...

Part 4... Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

முதல் விமான பயணம் நவம்பர் 20, 2004. நாளைக்கு 21 /11/ 2004 மதியம் மதுரையில் இருந்து மும்பை., அங்கு இரவு தங்கி, 22ம் தேதி people tree (interview agent) க்கு போயிட்டு.., எல்லா formalities முடிச்சுட்டு மதியம் அபுதாபி பயணம். நல்லிரவு அபுதாபியில் இருந்து பாரிஸ். பாரிஸ் ல 4 மணி நேரம் காத்திருப்பு. இறுதியாக பாரிஸ் - பர்மிங்ஹாம். 23/11/2004 மதியம் லேண்டிங். இது தான் பயணத்திட்டம். 20/11/2004. மதியம். முதல்முறையாக ., 9 மாதம் ஆன என் மகள் எதையும் பிடிக்காமல் எழுந்து நின்றாள். மகிழ்ச்சி. ஆனால் இன்று மட்டும் தான் பார்ப்பேன். எப்பவும் கண்டிக்கிற அப்பா அன்னைக்கு ரொம்ப அமைதியா , அக்கரையா பேசினார். வாழ்க்கையின் அடுத்த கட்டம். வெளிநாடு .., எப்படி இருக்குமோ தெரியாது. எப்பயும் பணப்புழக்கம் இருந்தாலும் .., அந்த மாதம் சுனக்கம். கேட்ட இடங்களிலும் கிடைக்கல. கேட்ட இடங்களிலும் உண்மையிலேயே இல்ல. என் மாமனார் குடுத்த 20000 ரூபாய்., அம்மாவோட GPF ல 30,000. அப்புடி இப்புடின்னு ஒரு 70000 தேருச்சு. திட்டம் என்னன்னா.., ஒருவேளை .. போற இடம் சரியல்லன்னா..., அடுத்த flight ட புடிச்சு திரும்பி வர்றதுக்கு பணம் வேணும்ல. ...

Part 3... Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

From Interview to Birmingham அப்போ நான் திருவான்மியூர் ல தங்கி IELTS தயாராகிக் கொண்டிருந்த நேரம். சக்திவேல் , பாண்டிச்சேரி ல வேலை பார்த்துக். கொண்டிருந்தான். அப்போ 2000 ல இருந்து எந்த posting ங்கும் போடல. எங்களுக்கு எங்கேயாவது போயி சம்பாரிக்கனும் னு வெறி. அரசாங்கத்துட்ட போராட்டம் பண்ணுறத விட, நம் முன்னாடி இருக்குற பாதைகளை ., களைந்து நமக்கான பாதையை பார்த்து போயின கிட்டே இருக்கனும். நம்ம பசங்க எல்லோரும் .., யாருக்காவது , எங்கயாவது பாரின் இன்டர்வியூ நடக்குறதா தெரிஞ்சா உடனே எல்லோரிடமும் சொல்லிடுவாங்க. நான் பாரின் வர விதை போட்டது ராஜசேகர் அண்ணா, பார்த்திபன் அண்ணா. அப்புறம் செண்பகராமன் அண்ணா. (இவர் தம்பி இங்கிலாந்து ல இருந்தாரு). அப்புறம் என் சகோதரன் ஜெபா., இங்க NMCல register பண்ணுறதுக்கு அவன் தான் காரணம். வேணாம்னு இருந்தவன வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போயி register பண்ண வச்சான். (என் மைண்ட் வாய்ஸ் .. அடப்பாவி என்னைய ஊறுகாய் ஆக்கிட்டானே ன்னு) அப்புறம் நானும் நாகேந்திரன் அண்ணனும் டெல்லிக்கு போயி இன்டர்வியூ அட்டன்ட் பண்ணினோம். (ரெண்டுபேருக்கும் registration இல்ல அப்போ. பண்ணி இருந்த...

Part 2...Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

 எல்லோருக்கும் வணக்கம்.   வாரகடைசில ரொம்ப பிசி.  நாம பாக்குற வேலையவிட வீட்டுல பாக்குற வேலை ... இங்க அதிகம். எல்லாமே “நமக்கு நாமே “ தான்.  இங்க ., எங்களுக்கு வாட்ச்சும், மொபைல் போனும் இரு கண்கள். ஒவ்வொரு நாளும் நாங்க தூக்கத்துல இருந்து எந்திரிக்கும் பொழுது பார்க்க ஆரம்பிக்கிற வாட்ச்ஐ .., அன்னைக்கு எல்லாம் முடிச்சுட்டு , தூங்க போறப்போ ..  அடுத்த நாள் எப்ப எந்திரிக்கனும்னு அலாரம்  வைக்கிற வரை பார்த்துக்கிட்டே இருக்கனும்.   இங்க மருத்துவத்துறையில் நர்ஸிங் ஹோம் பங்கு அதிகம். நம்ம ஊருல மாதிரி ஒரு வார்டில் அனுமதிக்கப்பட்ட படுக்கைகளுக்கு மேல் .., மூலையில் பாய் விரித்து அட்மிஷன் பண்ண முடியாது.  அதே நேரம் ஹால்பிட்டல் ., சிகிச்சைக்கு மட்டும் தான்.  பராமரிக்க ..,  1)ஒப்பந்தம் பண்ணப்பட்ட நர்ஸிங் ஹோம்க்கு டிரான்ஸ்பர் பண்ணிவிடுவார்கள்.  2) குழந்தைகள் என்றால் வீட்டுக்கு அனுப்பி பெற்றவர்கள் Care குடுக்கனும்.  ஆனா மருந்து ., மாத்திரைகள்.. தன்மைக்கு ஏற்ப ., அதாவது பாராசிட்டமால் , விட்டமின் , அலர்ஜி மாத்திரைகளை ...