Posts

Part 5... Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

சம்பளம். வரி. நேஷனல் இன்ஸயூரன்ஸ் இங்க, சம்பளம்... மணிக்கணக்கில் தான் அடிப்படை அளவு நிர்ணயிக்கப்படும். சராசரியாக.,வாரத்திற்கு 37.5 மணி நேரம் என்பது  முழுநேர வேலை நேரம். 18 -24 மணி நேரம் -  பகுதி நேர வேலை. அதற்கும் கீழ் என்றால் தற்காலிக பகுதி நேர வேலை. (Bank shift). விடுப்புகள்.  நமது நிர்ணயிக்கப்பட்ட வார வேலை நேரத்தை அடிப்படையாகக் கொண்டு வருடத்திற்கு விடுப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த வேலை என்றால்., 7 1/2 வாரங்கள் (அரசாங்க விடுமுறை உட்பட) .., தனியார் என்றால்., குறைந்தது 5.6 வாரங்கள். பெரும்பாலும் 4 வாரங்களுக்கு முன் விடுப்பு பதிவிட்டுக்கொள்ளலாம். (இடத்திற்கு ஏற்ப மாறுபடும். அரசு சார்ந்த வேலைக்கு sick leave எடுத்தால்., முதல் 3 மாதங்களுக்கு முழு சம்பளம் கிடைக்கும். அடுத்த 3-6 மாதங்களுக்கு 1/2 சம்பளம். (இடத்திற்கு ஏற்ப மாறுபடும்). 9 மாதத்திற்கு மேல் ., company based occupational therapist (mostly a doctor) நம்ம செக். பண்ணிட்டு ., வேலைக்கு திரும்பலாமா, இல்லையா என்று முடிவு செய்வார்கள்.  பிரசவகால விடுமுறையாக 3rd trimester ல இருந்து குழந்தை பிறந்த 9 மாதங்கள் வ...

Part 4... Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

முதல் விமான பயணம் நவம்பர் 20, 2004. நாளைக்கு 21 /11/ 2004 மதியம் மதுரையில் இருந்து மும்பை., அங்கு இரவு தங்கி, 22ம் தேதி people tree (interview agent) க்கு போயிட்டு.., எல்லா formalities முடிச்சுட்டு மதியம் அபுதாபி பயணம். நல்லிரவு அபுதாபியில் இருந்து பாரிஸ். பாரிஸ் ல 4 மணி நேரம் காத்திருப்பு. இறுதியாக பாரிஸ் - பர்மிங்ஹாம். 23/11/2004 மதியம் லேண்டிங். இது தான் பயணத்திட்டம். 20/11/2004. மதியம். முதல்முறையாக ., 9 மாதம் ஆன என் மகள் எதையும் பிடிக்காமல் எழுந்து நின்றாள். மகிழ்ச்சி. ஆனால் இன்று மட்டும் தான் பார்ப்பேன். எப்பவும் கண்டிக்கிற அப்பா அன்னைக்கு ரொம்ப அமைதியா , அக்கரையா பேசினார். வாழ்க்கையின் அடுத்த கட்டம். வெளிநாடு .., எப்படி இருக்குமோ தெரியாது. எப்பயும் பணப்புழக்கம் இருந்தாலும் .., அந்த மாதம் சுனக்கம். கேட்ட இடங்களிலும் கிடைக்கல. கேட்ட இடங்களிலும் உண்மையிலேயே இல்ல. என் மாமனார் குடுத்த 20000 ரூபாய்., அம்மாவோட GPF ல 30,000. அப்புடி இப்புடின்னு ஒரு 70000 தேருச்சு. திட்டம் என்னன்னா.., ஒருவேளை .. போற இடம் சரியல்லன்னா..., அடுத்த flight ட புடிச்சு திரும்பி வர்றதுக்கு பணம் வேணும்ல. ...

Part 3... Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

From Interview to Birmingham அப்போ நான் திருவான்மியூர் ல தங்கி IELTS தயாராகிக் கொண்டிருந்த நேரம். சக்திவேல் , பாண்டிச்சேரி ல வேலை பார்த்துக். கொண்டிருந்தான். அப்போ 2000 ல இருந்து எந்த posting ங்கும் போடல. எங்களுக்கு எங்கேயாவது போயி சம்பாரிக்கனும் னு வெறி. அரசாங்கத்துட்ட போராட்டம் பண்ணுறத விட, நம் முன்னாடி இருக்குற பாதைகளை ., களைந்து நமக்கான பாதையை பார்த்து போயின கிட்டே இருக்கனும். நம்ம பசங்க எல்லோரும் .., யாருக்காவது , எங்கயாவது பாரின் இன்டர்வியூ நடக்குறதா தெரிஞ்சா உடனே எல்லோரிடமும் சொல்லிடுவாங்க. நான் பாரின் வர விதை போட்டது ராஜசேகர் அண்ணா, பார்த்திபன் அண்ணா. அப்புறம் செண்பகராமன் அண்ணா. (இவர் தம்பி இங்கிலாந்து ல இருந்தாரு). அப்புறம் என் சகோதரன் ஜெபா., இங்க NMCல register பண்ணுறதுக்கு அவன் தான் காரணம். வேணாம்னு இருந்தவன வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போயி register பண்ண வச்சான். (என் மைண்ட் வாய்ஸ் .. அடப்பாவி என்னைய ஊறுகாய் ஆக்கிட்டானே ன்னு) அப்புறம் நானும் நாகேந்திரன் அண்ணனும் டெல்லிக்கு போயி இன்டர்வியூ அட்டன்ட் பண்ணினோம். (ரெண்டுபேருக்கும் registration இல்ல அப்போ. பண்ணி இருந்த...

Part 2...Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

 எல்லோருக்கும் வணக்கம்.   வாரகடைசில ரொம்ப பிசி.  நாம பாக்குற வேலையவிட வீட்டுல பாக்குற வேலை ... இங்க அதிகம். எல்லாமே “நமக்கு நாமே “ தான்.  இங்க ., எங்களுக்கு வாட்ச்சும், மொபைல் போனும் இரு கண்கள். ஒவ்வொரு நாளும் நாங்க தூக்கத்துல இருந்து எந்திரிக்கும் பொழுது பார்க்க ஆரம்பிக்கிற வாட்ச்ஐ .., அன்னைக்கு எல்லாம் முடிச்சுட்டு , தூங்க போறப்போ ..  அடுத்த நாள் எப்ப எந்திரிக்கனும்னு அலாரம்  வைக்கிற வரை பார்த்துக்கிட்டே இருக்கனும்.   இங்க மருத்துவத்துறையில் நர்ஸிங் ஹோம் பங்கு அதிகம். நம்ம ஊருல மாதிரி ஒரு வார்டில் அனுமதிக்கப்பட்ட படுக்கைகளுக்கு மேல் .., மூலையில் பாய் விரித்து அட்மிஷன் பண்ண முடியாது.  அதே நேரம் ஹால்பிட்டல் ., சிகிச்சைக்கு மட்டும் தான்.  பராமரிக்க ..,  1)ஒப்பந்தம் பண்ணப்பட்ட நர்ஸிங் ஹோம்க்கு டிரான்ஸ்பர் பண்ணிவிடுவார்கள்.  2) குழந்தைகள் என்றால் வீட்டுக்கு அனுப்பி பெற்றவர்கள் Care குடுக்கனும்.  ஆனா மருந்து ., மாத்திரைகள்.. தன்மைக்கு ஏற்ப ., அதாவது பாராசிட்டமால் , விட்டமின் , அலர்ஜி மாத்திரைகளை ...

Part 1...Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

நான் ... அருள்நீதிதேவன். ஆண் செவிலியர். இங்கிலாந்து. ஒரு நர்ஸா... இங்க எப்புடி வாழ்க்கை போகுதுன்னு பகிர்த்துகிறதுக்கு ஆசை படுறேன். என்ன ., என்ன.. இழப்புகள், என்ன சாதிச்சோம்னு வெளியில சொன்னா.. மனசுக்கு ஒரு இதம். டிபிக்கல் நர்சிங் குடும்பம். என்னவெல்லாமோ ஆகணும்னு கனவுகண்டாங்க பெத்தவுங்க. எனக்குன்னு எந்த கனவும் இருந்தது இல்ல. ஆனா நர்சா மட்டும் ஆகக்கூடாதுன்னு நெனச்சேன். கம்ப்யூட்டர்ல எம்பில் வர பண்ணினாலும் ., கடைசியில வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தது “செவிலியம்” தான். நர்சிங்சேருர வரைக்கும் நான் வாழ்க்கைல கஷ்டம்னு ஒரு பகுதியை பார்த்தது இல்ல... அதுக்கு அப்புறம் நடந்ததெல்லாம் தினமும் ஒரு படிப்பினை. நான் .... எனக்குன்னு பல அவதாரம் இருக்கோ இல்லையோ.... அத சொல்லி பீத்திக்க விரும்பல. ஆனா “ நான் செவிலியன்” னு சொல்லிக்கிறதுல .., ஏகமனதாக கர்வப்படுகிறேன்... இங்கிலாந்துல வேல பார்குறதுனால .., இவன் புத்திசாலையோ.., படிப்பாளியோ ன்னு நினைக்காதீங்க. நான் ஆவரேஜ் மாணவன் தான். அதுக்காக திறமை இல்லைன்னு இல்ல.. அத உபயோகிக்கத் தெரியாத சோம்பேறி. அப்புறம் எப்புடின்னு கேக்குறீங்களா?.. அஜித் வசனத்துக்கு ஆப்போ...

திரு.அருள் நீதி தேவன்..அவர்களை பற்றிய குறிப்பு..

Image
திரு.அருள் நீதி தேவன் முதுகுளத்தூரில் பிறந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, செவிலியர் பள்ளியில் 2000ல் செவிலியப் படிப்பை முடித்து இலண்டனில் செவிலியராக பணிபுரிகிறார் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக..... இவரது தாயார் செவிலியக்கண்காணிப்பாளராக இருந்து மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் பணி ஒய்வு பெற்றவர்...... இவரது தகப்பனார் ஒரு சமூக சேவகர்... இவரது மனைவி செவிலியர்   திருமதி.செல்வி....... Overseas Nursing குறித்தும் தமக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களைப் பற்றியும் சில தினங்களில் நம்மிடம் இலண்டனில் இருந்து நம்மிடம் விரைவில் பகிரப்போகிறார் திரு.அருள் நீதி தேவன்....💐💐💐💐💐

part 1..சங்கத் தனிநிலை விதியும்(BYLAW), எனது கண்ணோட்டத்தில் அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்..ச.பால்பாண்டியன்..

*செவிலிய மறுமலர்ச்சி தொடர்(30/04/17) :* *சங்கத் தனிநிலை விதியும்(BYLAW), எனது கண்ணோட்டத்தில் அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்..* *அத்தியாயம் 2 :* சென்ற அத்தியாயத்தில் சங்கத்தின் தோற்றம் குறித்தும், சங்க முன் வரைவுக் குழு பற்றியும், ஆரம்பகால உறுப்பினர்கள் பற்றியும் பார்த்தோம்..!! இந்த அத்தியாயத்தில் நமது சங்கத்தின் தனிநிலை விதி(BYLAW) அமைப்பைப் பற்றி பார்க்கப் போகிறோம்.. *தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத் தனிநிலை விதி(BYLAW) அமைப்பு :* *1. பெயர் :* இச்சங்கத்தின் பெயர் *தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்* என்று தமிழிலும், *TAMILNADU GOVT. NURSES ASSOCIATION* என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும். *2. இலச்சினை(Emblem) :* இந்த சங்கத்திற்கு ஒரு வட்டத்தின் உள்ளாக ஒரு விளக்கிலிருந்து கதிர்கள் வெளிவருவது போன்று இலச்சினை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வட்டத்தின் உள்ளாக *TGNA* என்றும், *பிணியாளர் சேவையே பிறப்பிலான் சேவை* என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. *3.வரையறுப்பு :* *சங்கம்* என்றால் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் என்று பொருள். *உறுப்பினர்* என்றால் சங்கத்திற்கு சந்தா செலுத்தும் உ...

இந்தியாவில் தொழிற்சங்கம் தோன்றிய வரலாறு...திரு.மணிகண்டன்

* "செவிலியச் சிறகுகளின் * * செவிலிய மறுமலர்ச்சி பாகம் -2" *   * (16/04/2018) * ~~~~~~~~~~~~~~~~~ * படைப்பாளி *    ~~~~~~~~~~ * 1.திரு.மணிகண்டன் *               * (செவிலியர்) *    *(இந்தியாவில் தொழிற்சங்கம் தோன்றிய வரலாறு...பின் செவிலிய சங்க தோன்றல்    வரலாறு ...) *இன்றைய பதிவில் பணி காரணமாக திரு.மணிகண்டன் மாஸ்டர் அவர்களுடைய எழுத்துருவம் இல்லாவிட்டாலும் ஆடியோ உரை கிடைத்துள்ளது...

சங்கத் தனிநிலை விதியும்....செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்.....திரு.S.பால்பாண்டி

* "செவிலியச் சிறகுகளின் * * செவிலிய மறுமலர்ச்சி பாகம் -2" *   * (16/04/2018) * ~~~~~~~~~~~~~~~~~ ✍✍✍✍✍✍✍✍ * படைப்பாளி *   * 1.திரு.S.பால்பாண்டி *                               * (செவிலியர்) *      * (சங்கத் தனிநிலை விதியும்             (BYLAW), தனது  கண்ணோட்டத்தில் அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்...என்ற*செவிலிய மறுமலர்ச்சி கட்டுரை* செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.. 🙏🙏 *செவிலிய மறுமலர்ச்சி*  *என்ற பெயரில் செவிலிய துறையின் முன்னேற்றத்திற்கு ஒரு அடி முன்னெடுத்து வைத்திருக்கும் ஆண் செவிலியர், எனது மூத்த சகோதரர் திரு.ராஜாராம் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!* ஒரு துறையில் மறுமலர்ச்சி என்பது அத்துறையைச் சேர்ந்தவர்கள், அவர்களின் துறை சம்பந்தமான அனைத்து தகவல்களையும், அரசாணைகளையும், பணி...

செவிலியமும் சில நெகிழ்ச்சி தருணமும்....திரு.ராஜாராம்

Image
*செவிலியமும் சில நெகிழ்ச்சி தருணமும்.........* ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~       *நான் செவிலிய பட்டயப்படிப்பை 2003 ஏப்ரலில் முடித்து சென்னை அப்போலோவில் Unique Home Health Care ல் குடும்ப சூழல் காரணமாக ஒரு வருடம் பணியாற்றினேன்(12 மணி நேரவேலை)*            *பின்பு மதுரை அப்போலோவில் 8 மணிநேர செவிலியராக பணியாற்றியபோது Home duty ஐ யே  முழுவதும் பார்த்துவிட்டு மருத்துவமனையில் பணி அதுவும் Corporate company Hospital என்றதும் முதலில் தயக்கமாகத்தான் இருந்தது.பின் என்னை முழுவதுமாக ஈடுபட ஆரம்பித்துக் கொண்டேன்*. *அப்போதுதான் 2004 டிசம்பர் 26 யாரும் மறக்க முடியா சுனாமி புரட்டிப்போட்ட நாள்*அதற்காக எங்கள்* *மருத்துவமனையில் இருந்து 2 குழுவாக பிரிந்து*  *முதலுதவிக்காக கன்னியாகுமரி,நாகப்பட்டிணம்* *பகுதிகளுக்கு சென்றோம்*.*அந்த* *தருணம்* *வாழ்வில் மறக்க முடியாத* *தருணமாக* *இருந்தது*?*பணக்காரர்கள்* *பலர்* *நாங்கள் கொடுக்கும்* *ரொட்டிப்பொட்டலங்களை வாங்க* *மனமில்லாமலும்* *அதே நேரம் *பசித்துயராலும்* *வாங்கிச்* *சென்றனர்.செவிலியராய் பல உயிர்க...